சனி, 17 மே, 2025

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை சுவர் விளம்பரங்களாக தீட்டிய தனியா ஜுவல்லரி நிறுவனம். அரசியல் பிரமுகர்களின் கைகளில் இருந்து அரசு சுவற்றை மீட்டுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை சுவர் விளம்பரங்களாக தீட்டிய தனியா ஜுவல்லரி நிறுவனம். அரசியல் பிரமுகர்களின் கைகளில் இருந்து அரசு சுவற்றை மீட்டுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு. 

சேலத்தில் பிரபல தனியார் ஜுவல்லரி நிறுவனமான ஓவியா ஜுவல்லரி நிறுவனம் தலைமை இடமாகக் கொண்டு சேலம் குகை பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாரம்பரியம் கொண்டு இந்த ஜுவல்லரி நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆடையகத்துடன் கூடிய ஜுவல்லரி நிறுவனமாக சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சமீபத்தில் புதிதாக துவக்கப்பட்டது. இந்த ஓவியா ஜுவல்லரி நிறுவனத்திற்கு எதிரே சேலம் மாநகராட்சியின் நேரு கலையரங்கம் மிகப் பிரம்மாண்டமான அளவில் புதுப்பொலிவுடன் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இதன் சுற்றுச்சூழல் மிக நீண்ட நெடியது. என்பதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு டிஜிட்டல் பேனர்களை சம்பந்தப்பட்ட அரசு சுவற்றில் பொருத்துவதும் பின்னர் அகற்றுவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நேரு கலையரங்க சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஓட்டுவது தொடர்பாக இரண்டு முக்கிய பிரதான கட்சி பிரமுகர்களிடையே மிகப் பெரிய ஒரு போராட்டம் வெடிக்க கூடிய சூழல் உருவாகி இருந்தது. இது போன்ற பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது தான் சம்பந்தப்பட்ட ஓவியா ஜுவல்லரியின் கிளை நிறுவனம் இங்கு துவக்கப்பட்டு இருந்தது. தங்களது வளரியை நிறுவனத்திற்கு எதிரே இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட நிறுவன நிறுவனத்தினர் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி தங்களது ஏடு கலையரங்க அரசு சுற்றுச் சுவரில் தங்களது நிறுவனத்தின் சார்பாக விளம்பரப்படுத்திக் கொள்ள முறையிட்டனர்.
இதனை ஏற்ற சேலம் மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஓவியா ஜுவல்லரி நிர்வாகத்திற்கு அந்த அனுமதியையும் வழங்கியது. இதனை அடுத்து சேலம் நேரு கலையரங்க அரசு சுற்றுச்சுவர் முழுவதும் தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் விளையாட்டுக்கள் தேசிய விலங்குகள் மரம் வளர்ப்பதை காப்போம், அது மட்டுமல்லாமல் தமிழர்களின் மறந்து போன பாரம்பரிய கலாச்சார விளையாட்டுகள் என்பது போன்ற பொது மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் எனாமல் பெயிண்டினால் சுற்றுச்சுவர் முழுவதும் விளம்பரப்படுத்தியது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். இது குறித்து பொதுமக்கள் நம்மிடையே கூறிய கருத்துக்களை பார்த்தால் இந்த சுற்றுச்சூழல் முழுவதும் ஒரு கட்டத்தில் அரசியல் வாதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டுவதில் இரு தரப்பு கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அதனை தடுத்து சம்பந்தப்பட்ட ஜுவல்லரி நிறுவனம் தமிழர்களின் மறந்து போன கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் வகையில் சுவர் விளம்பரம் செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த பகுதி சேலம் திருச்சி பிரதான சாலை என்பதால் இந்த பகுதியில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளாக இருந்தாலும் சரி பாதசாரிகளாக இருந்தாலும் சரி சம்பந்தப்பட்ட சுற்றுச்சுவட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை ஒருவரும் பார்க்காமல் செல்வதே இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என சேலம் புகழ்பெற்ற ஓவியா ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் சண்முகராஜ் நன்மையே பகிர்ந்து கொண்டார்.
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: