வெள்ளி, 16 மே, 2025

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக திருப்பதி ஏழுமலையானின் கோவிந்தா கோவிந்தா பாடலை நடிகர் சந்தானம் ஈடுபடுத்திய விவகாரம். தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வலுத்த எதிர்ப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாடல் படத்திலிருந்து நீக்கம். ஒட்டுமொத்த பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என சேலம் கிழக்கு மாவட்ட பாஜக லீகல் விங் செயலாளர் வழக்கறிஞர் அஜித் சாக்கோ கருத்து.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக திருப்பதி ஏழுமலையானின் கோவிந்தா கோவிந்தா பாடலை நடிகர் சந்தானம் ஈடுபடுத்திய விவகாரம். தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வலுத்த எதிர்ப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாடல்  படத்திலிருந்து நீக்கம். ஒட்டுமொத்த பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என சேலம் கிழக்கு மாவட்ட பாஜக லீகல் விங் செயலாளர் வழக்கறிஞர் அஜித் சாக்கோ கருத்து. 

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இந்துக்களின் புனித கடவுளாக விடவும் திருப்பதி ஏழுமலையான் கோவிந்தா கோவிந்தா என்ற பாடல் அசிங்கப்படுத்தும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் நடிகர் சந்தானம் மற்றும் ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் சித்தரித்து இருந்தனர். இதற்கு தமிழகம் மற்றும் ஆந்திர மக்களிடையே மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சேலம் பாஜக கிழக்கு மாவட்டம் வடக்கவிஞர்கள் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த வாரம் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்து விருந்தனர். அந்த மனுவில் இந்துக்களின் புனித கடவுளான திருப்பதி ஏழுமலையானில் கோவிந்தா கோவிந்தா என்ற துதி பாடலை மிகவும் கேவலப்படுத்தி இழிவு படுத்தி இருந்த நடிகர் சந்தானம் நடிகர் ஆர்யா மற்றும் படக்குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட பாடலை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விருந்தினர். அது மட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அளவில் முதல் எதிர்ப்பு சேலம் மாநகரிலிருந்து வெளிப்பட்டதை தொடங்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடிகர் சந்தானம் மற்றும் ஆர்யா உள்ளிட்ட பட குழுவினரின் மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பான செய்தி தமிழகத்தில் உள்ள முக்கிய பிரதான சேனல்களில் வெளியானது. 
அது மட்டுமல்லாமல் ஆந்திராவில் ஜனசக்தி கட்சியின் மாவட்ட நிர்வாகி கிரண் ராயல் உட்பட திருப்பதி தேவஸ்தான நிர்வாகமும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆந்திர மாநிலத்திலும் புகார்கள் எழுந்தது. திரைப்படத்திற்காக கோவிந்தா கோவிந்தா பாடலை இழிவுபடுத்திய விவகாரம் தொடர்பாக தமிழக மற்றும் ஆந்திராவில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பைத் தொடர்பு திரைப்பட நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் வெளியாக இருந்த சம்பந்தப்பட்ட பாடலை நீக்குவதாக நேற்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு குறித்து சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ மற்றும் நிர்வாகிகள் நம்மிடையே கூறுகையில் சம்பந்தப்பட்ட பாடலுக்கு தமிழகத்தில் சேலத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு நாங்கள் வெளிப்படுத்தியதன்  அடிப்படையில் ஆந்திராவிலும் கொந்தளிப்பு வெளியாகி தற்போது சம்பந்தப்பட்ட பாடலை படத்திலிருந்து நீக்குவதாக நடிகர் சந்தானம் அறிவித்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இதுக்காக செய்தி வெளியிட்ட அத்தனை முன்னணி செய்தி சேனல்களுக்கும் இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் தங்களது  நன்றிகளை  தெரிவித்துக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் இந்து மதம் உட்பட எந்த ஒரு மத பாடல்களையும் இதுபோன்று திரைப்பட பண வசூலிக்காக கொச்சைப்படுத்தக் கூடாது அசிங்கப்படுத்த கூடாது என்றும் கேட்டுக் கொண்டதோடு தங்களின் முதல் எதிர்ப்பு பாஜகவிற்கு கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். உடன் நிர்வாகிகள் கிருபாகரன், சிவா மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: