செவ்வாய், 13 மே, 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா. நல உதவிகள் வழங்கியும், உச்சி கால பூஜை செய்து அதிமுகவினர் நேர்த்திக்கடன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா. நல உதவிகள் வழங்கியும், உச்சி கால பூஜை செய்து அதிமுகவினர் நேர்த்திக்கடன். 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி திரு.கே. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா  அதிமுகவினரால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் உதவி இயக்கம் முதியோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு மதிய உணவும், அவர்களுக்கான நல உதவிகளும் வழங்கப்பட்டன.
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளரும், சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர்மான கே.சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், அதிமுக மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் அவர்களுக்கான நல உதவிகளை வழங்கியும் மகிழ்ந்தனர். 
இதேபோன்று சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவின் முன்னாள் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான ஏ பி சக்திவேல் சார்பில் சேலத்தில் எட்டுப்பட்டி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு உச்சி கால பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுக நிர்வாகிகள் சிங்காரம், எம் கே செல்வராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பங்கேற்ற இந்த நிகழ்விலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன்,  அதிமுக நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், ஜமுனா ராணி, உங்கிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: