சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகருக்கு நாள்தோறும் வருகை தரும் வட மாநிலத்தவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும். சேலத்தில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாக அரவிந்தன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜங்ஷன் பகுதியில் கணவன் மனைவி இருவரையும் கொடூர முறையில் கொலை செய்து நகையை திருடி சென்றுள்ளார்கள். மிகவும் இது வேதனைக்குரிய விஷயம் என்றும், இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக முதல்வர் அவர்களும் தலையிட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய வட மாநிலங்களை சேர்ந்தவர்களுடைய லிஸ்ட் எடுத்து காவல்துறை உடனடியாக இதுபோன்று நடைபெறாமல் இருக்க அந்தந்த காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இதுபோன்று வெளி மாநிலங்களில் இருந்து, நமது தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய அந்நிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக கணக்கு எடுத்து முழு விபரத்தை சேகரித்து இதுபோன்ற குற்றங்கள் இனி தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எங்கும் நடைபெறாமல் இருக்க நம்முடைய தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறியவர், சேலம் மாநகரில் கொலை செய்த 6 மணி நேரத்திலே குற்றவாளிகளை கைது செய்த சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் அவர்களுக்கு எங்களுடைய தேசிய தெலுங்கர் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் மேலும் அந்த ஜங்ஷன் பகுதியில் நடந்த கொலை குற்றம் மிகக் கொடூர கொடுமையானது சுத்தியிலே தாக்கி சினிமா பானில் வருகின்றது போல் அந்த நபர் மிகக் கொடூரமான முறையிலே தாக்கியுள்ளார் என்றார். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்பதோடு, தமிழ்நாட்டில் எந்த இடத்திலுமே நடைபெறாமல் இருக்க தமிழக காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறிய டாக்டர் நாக அரவிந்தன், தமிழ்நாடு எதிர்பார்த்துக் காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் தமிழக அரசுக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய வெற்றியாகும் என்றதோடு, இதுபோன்று தமிழ்நாட்டிலே எந்த குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பெண்களுக்கு குற்றங்கள்குற்றங்கள் நடைபெறாமல் இருக்க இது ஒரு நல்ல தீர்ப்பு என்பது இந்த நேரத்திலே நாங்கள் வரவேற்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: