செவ்வாய், 6 மே, 2025

பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கரூர் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சாமி (வயது 54). இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் பவானிசாகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அவரை போலீசார் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: