இன்று 102 - வது பிறந்தநாள் விழா - ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை - நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்...
தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல் - அமைச்சருமான மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் விழா இன்று தி.மு.க.வினரால் செம்மொழி நாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சந்திரகுமார் எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பி.கே. பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகரத் துணைத் தலைவர் சந்திரசேகரன், பகுதி செயலாளர் கோட்டை ராமச்சந்திரன், அக்னி சந்துரு, கவுன்சிலர்கள் கீதாஞ்சலி செந்தில்குமார், வக்கீல் ரமேஷ் குமார், நிர்வாகி கேபிள் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
0 coment rios: