திங்கள், 2 ஜூன், 2025

ஓய்வூதியம் பெறும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை....




திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம்,தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவை சார்பில் திருப்பூர் மத்திய மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் குரு நாகலிங்கம்,தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க இணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுபோற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் இக்கூட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்,கட்டிட தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: