சனி, 30 ஆகஸ்ட், 2025

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-வது பட்டமளிப்பு விழா. 681 மாணவ மாணவியருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-வது பட்டமளிப்பு விழா. 681 மாணவ மாணவியருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா  விழாவிற்கு தலைமையேற்றார். 
திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ மாணவியர் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள்  வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கல்லூரியின் முதல்வர் Dr.கனகராஜ் அவர்கள் தமது உரையில், மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ.5.00 லட்சம் வரையிலான ஊதியத்தில் 1036-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள், வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும்,100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும்  அவர் கூறினார்.
கல்லூரியின், தலைவர் வள்ளியப்பா  பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 67 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற அனைவரும் தொழிற் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக விழாவில் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரியின் துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

  

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: