சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை இணைத்த தியாகிகள் தினத்தை போற்றும் வகையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேவை இயக்கம் சார்பில் அசோகர் நினைவு ஸ்தூபி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாலை அணிவித்து மலர் தூவையும் மரியாதை.
இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையும் நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய அளவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகிகள் தினமான இன்று சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் ( Martyrs Day ) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தியாகிகள் தினத்தை போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது அசோகர் சிம்ம ஸ்தூபிக்கு, மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்துபித்தூனில் மாவட்ட செயலாளர் ஆர் வி பாபு தலைமையில் தொழிற்சங்க அமைப்பாளர் KSA.ஆனந்தன் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தியாகிகள் நினைவு நாளை போற்றும் விதமாக வணங்கினர் உடன் ஆசிரியர் செவ்வேல், மணிகண்டன், விநாயகா கார்த்திகேயன், சந்தோஷ்குமார், ரமேஷ், பெருமாள், மனோ, மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



0 coment rios: