வியாழன், 5 பிப்ரவரி, 2026

சேலத்திற்கு வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டியலின பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மூன்று பிரதான கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இதை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்லும் போது கருப்புக்கொடி காட்டப்படும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அறிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்திற்கு வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டியலின பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மூன்று பிரதான கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இதை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்லும் போது கருப்புக்கொடி காட்டப்படும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அறிக்கை. 

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அறிக்கையில் வாயிலாக சேலம் வரும் தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு கருப்புக்கொடி காட்டப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார். அந்த தகவலில், தமிழ்நாட்டில் 44 சட்டமன்ற ரிசர்வ் தொகுதியிலே தேர்வு பெறுகின்ற அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்ற பட்டியல் இன மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களுடைய உரிமைகள் எல்லாம் தட்டி கேட்பதில்லை,  பதிவு செய்வதில்லை,  அவர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற மத்திய அரசு நிதி எல்லாம் அந்த மக்களுக்கு சரியான முறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்புகின்ற போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அதையெல்லாம் அந்த 44 ரிசர்வ்  தொகுதி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேட்பதில்லை.  அதே போல தமிழகத்தில் 12 லட்சம் ஆக்டர் பஞ்சமி நிலம் 1925 ல் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.  
இன்று அந்த 12 லட்சம் ஹெக்டேர் நிலம் எங்கே இருக்கிறது.  எத்தனை லட்சம் ஹெக்டேர் நலம் மட்டும் இருக்கிறது என்று வெள்ளை அறிக்கையை திமுக மற்றும் அதிமுக அரசுகள்  இதுவரை வெளியிடவில்லை. ஆகவே தான் தான் அடுத்த முறை முதல்வர் என்று சொல்லிக் கொள்கின்ற டி.வி.கே தலைவர் விஜய் அவர்கள் பறைசாற்றிக் கொள்வதை நாங்கள் ஒருபுறம் வரவேற்றாலும், சேலத்திற்கு வருகின்ற 13 ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக  வருகின்ற விஜய் அவர்கள், 
எங்களுடைய தேசிய ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையான ஒன்று 12 லட்சம் எக்டர் பஞ்சமி நிலங்களை  எல்லாம் தமிழகத்தில் மீட்டு எடுத்து அதற்கென்று ஒரு போர்டு உருவாக்க தேர்தல் வாக்குறுதி  அறிக்கையாக அவர் அளிக்க வேண்டும்,  இரண்டாவது தமிழக அரசின் பல்வேறு துறைகளிலே கடந்த 25 ஆண்டுகளாக நிரப்பப்படாத பேக்லாக் வேக்கன்சி காலி பணியிடங்களில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள்  பல்வேறு துறைகளில் உள்ளது. அடுத்த வருகின்ற டி.வி.கே தலைவர் விஜய் அவர்கள் அந்த 75 ஆயிரம் காலி பணியிடங்களை  நிரப்புவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அவர்கள்  சேலத்தில் அறிவிக்க வேண்டும்,  அதேபோல தாட்கோ மானியத்துடன் கொடுக்கின்ற  வங்கி கடமானது பெரும்பாலும் அந்த மக்களை போய் சேராமல், தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாக வங்கி நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறது.  பலாயிரம் கோடி ரூபாய்கள் விரைமாகிறது. பெயரளவில்  அந்த மக்களுக்கு இத்தனை லட்சம் ஆயிரம் கோடி போகிறது கணக்கு காட்டுற அந்த நிர்வாகம் அந்த மக்களிடம் அந்த நிதியை போய் சேர்ப்பதில்லை, அதற்கு காரணமே வங்கியில் அவர்களுக்கு அந்த கடனை கொடுக்க மறுப்பது தான்.  ஆகவே தமிழக அரசு எந்த அரசும் அந்த தலித்  மக்களுக்கான தாட்கோ, சிட்கோ கடல்  வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் டி வி கே விஜய் அவர்கள் தன் தேர்தலில் அடிக்கையிலே அந்த தாட்கோ லோன் தமிழகம் முழுதும் கொடுப்பதற்கு ஒரு தனி வங்கி உருவாக்கி தரவேண்டும் என்று கோரிக்கையை நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையாக சேலத்தில் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையோடு இந்த விஷயங்கள் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம் என்றும்  இவற்றையெல்லாம் சேலத்தில்  அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல கடிதம் உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். சேலம் வருகின்ற நீங்கள் இந்த கூட்டத்திலே தமிழகத்தில்  இருக்கின்ற பட்டியலின பழங்குடியின  பிற்படுத்தபட்ட  மக்களுடைய அந்த  உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும். இந்த மூன்று  கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக  அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ள தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி,  
அவ்வாறு நீங்கள்  சேலத்தில் தேர்தல் அறிக்கையாக இந்த மூன்று கோரிக்கை தரவில்லை என்றால் நீங்கள் திரும்பும்போது சேலம் மாவட்டம் முழுதும் உங்களுக்கு எங்களுடைய தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு சார்பாக கருப்புக்கொடியை காட்டுவதற்காக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: