செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

த.வெ.க மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ் கடவுளான முருகனின் பாடலை இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் உட்பட இதற்கு உடனடியாக இருந்து கட்சியின் தலைவர் விஜய் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ கட்சி நிர்வாகிகளுடன் சேலம் COP அலுவலகத்தில் புகார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

த.வெ.க ஆண்டு விழாவில் தமிழ் கடவுளான முருகனின் பாடலை இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் உட்பட இதற்கு உடனடியாக இருந்து கட்சியின் தலைவர் விஜய் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ கட்சி நிர்வாகிகளுடன் சேலம் COP அலுவலகத்தில் புகார்.

சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ உள்ளிட்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில், சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதை எடுத்து விழா நடைபெற்றது. விழாவில் கானா பாடகர் வேல்முருகன் கொள்கை பரப்புச் செயலாளர்களை பார்த்து நீங்க சொல்லிட்டீங்க தைப்பூசம் அப்படின்னு சொல்லி உண்மையிலேயே இன்னைக்கு தான் தைப்பூசமா நான் பார்க்கிறேன் என விஜய்யை பார்த்து விரலால் சைகை காட்டி இந்து மத நம்பிக்கை கடவுளான வீரத்தின் அடையாளமான அழகின் அடையாளமான இந்து கடவுள் இந்து மக்களின் மத நம்பிக்கையான முருக கடவுளையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயையும் ஒப்பிட்டு விஜய் பார்த்த நாளான இன்று தைப்பூசமாக பார்க்கிறேன் என இந்துமத மக்கள் நம்பிக்கையை கடவுளான முருகனை இழிவுபடுத்தி பேசியுள்ளார். பின்னர் வேல்முருகன் இந்து கடவுள் முருகனின் பாடலை பாடுகிறேன் எனக் கூறி உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என்று கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகனை பார்த்து கூற அதற்கு ராஜ்மோகன் விஜய் பார்த்து நீங்க சொன்ன உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என்ற முருகன் பாடலை பாடி விஜய் பார்த்து செய்கையால் விஜய் தான் முருகன் கடவுள் என்று செய்கை செய்ததும் உங்களை நம்பி நாங்கள் இருக்கிறோம் என முருக கடவுளையும் விஜயையும் ஒப்பிட்டு இழிவுபடுத்தி உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் மருதமலை மாமணியே முருகையா என்ற முழு பாடலையும் பாடிய பாடகர் வேல்முருகன் ஆனால் முழுப்பாடையும் முடிக்கும் போது கடைசி 3 வரியை மாற்றி பாடலின் இறுதியில் வருவாய் எங்கள் தளபதியே எனவும் வருவாய் எங்கள் வெற்றிக் கழகமே எனவும் பாடி இந்து மத நம்பிக்கையையும் இந்துமத முருக கடவுளையும் இந்து மத கடவுளின் பாடலையும் இழிவு படுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் மீதும் இதற்கு உடந்தையாக உறுதுணையாக இருந்து ஊக்குவித்த கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் மீதும் டிஎன்எஸ் பிரிவு 299 மற்றும் 32 மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்து மத கடவுள்களையும் இந்து மத உணர்வுகளையும் இனி இதுபோல வேறு எவரும் புண்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் வழக்கறிஞர் அஜித் சாக்கோ தெரிவித்தார். ஏற்கனவே நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தி கோவிந்தா கோவிந்தா என்ற பாடலை சந்தானம் பாடியிருந்தார் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சேலம் மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மணி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சிவா குணாளன் மணி பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: