ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நாமக்கல் ராசிபுரத்தில் பட்டியலின ஊழியர் மீது விரோத போக்கை கடைபிடிக்கும், வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

நாமக்கல் ராசிபுரத்தில் பட்டியலின ஊழியர் மீது விரோத போக்கை கடைபிடிக்கும், வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் வலியுறுத்தல். 

சேலம் மாவட்டம் உட்பட தமிழக முழுவதிலும் பட்டியலின ஊழியர்கள் மீது அரசு அதிகாரிகள் அத்து பெறும் போது தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமே உள்ளன. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் தற்பொழுது அரங்கேறி உள்ளது. இதனை கண்டித்து தேசிய ஒடுக்கப்பட்டு மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் ( பொ) திருமதி. P சாந்தி மற்றும் துணை பதிவாளர் திரு K.நாகராசன் ஆகியோர் பட்டியலின ஊழியர் ( ராசிபுரம் கடை எண்-7  விற்பனையாளர் திரு சண்முகம் ) மீது சட்ட விதி மீறல்,மற்றும் சாதிய வன்கொடுமை கூட்டுறவு சங்க விதி மீறல் செய்து தற்காலிக பணி நீக்கம் உத்தரவு வழங்கி தவறு என்று அறிந்து திரும்ப  பெற்றது. பட்டியலின ஊழியர் மீது  எந்த முகாந்திரம் உண்மை விசாரணை இல்லாமல் காலி சாக்கு பைகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்யாமல் உண்மை நிலை அறியாமல் பட்டியலின ஊழியர் திரு  சண்முகம் மீது பொய் கூற்றசாட்டு பிணைந்து, அவருக்கு கிடைக்க வேண்டிய பணி மூப்பு வாய்ப்பை நிறுத்த முயலும் இரு சாதி இந்து அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது அளிக்கபடும் புகார் மீது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உயர்திரு கோட்டாச்சியர் அவர்களின்  விசாரணைக்கு உத்தரவு வழங்கிட கோரிக்கை வைப்பதாகவும், அவர்கள் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் -1989
( amended 2015 & 2018) கீழ் வழக்கை பதிய ராசிபுரம் காவல் துறைக்ககு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோருவதாக   சரஸ்ராம்ரவி தனது கண்டன அறிக்கையில் பதிவிட்டு உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: