சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ்.
தமிழக சட்டப்பேரவைக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் கடந்த 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது, சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று தமிழக முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாக முன்வந்து சேலத்தை சேர்ந்த ரஜினியின் தீவிர பக்தனாக பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக தலைமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கனவே, இரண்டாயிரத்திற்கு அதிகமான ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று, எடப்பாடி யார் அவர்களின் இல்லத்தில் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் சமீப தினங்களாக சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க ரஜினியின் தீவிர ரசிகர்கள் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதை தமிழகமே திரும்பி பார்த்தது. அந்த வகையில் தேர்தல் நாளான இன்று ரஜினியின் தீவிர பக்தன் பாரப்பட்டி கனகராஜ் மற்றும் திருமதி பாரப்பட்டி கனகராஜ் ஆகியோர் சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பாரப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகள் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும் என்றும் பாரப்பட்டி கனகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.



0 coment rios: