ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததன் எதிரொலி. திமுகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி எஸ் கே கணேசன் தற்போது தேவையில்லாத பிரச்சனை செய்து வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றச்சாட்டு. இதேநிலை நீடித்தால் எஸ் கே கணேசன் மீது மானஸ்து வழக்கு தொடர்வேன் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததன் எதிரொலி. திமுகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி எஸ் கே கணேசன் தற்போது தேவையில்லாத பிரச்சனை செய்து வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றச்சாட்டு. இதேநிலை நீடித்தால் எஸ் கே கணேசன் மீது மானஸ்து வழக்கு தொடர்வேன் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் சேலம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களின் தரப்பில் என்டயே கூட்டணி கட்சியின் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான பாரப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் நிபந்தனை அற்ற முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு இனி வரமாட்டார் என்ற சூழலில் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்கள் அனைத்தும் முற்றிலுமாக கலைக்கப்பட்டன. என்றாலும் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே தற்பொழுது வரை ரஜினிகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரப்பட்டி சேர்ந்த கனகராஜ் அதிமுகவிற்கு நிபந்தனை ஏற்று முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து தற்பொழுது சேலம் மாவட்ட ரஜினி மன்றங்களில் பெரும் பூதாகரத்தை கிளப்பி உள்ளது என்பது சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உச்சகட்ட பரபரப்பினை எட்டி உள்ளது. 
இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே உள்ள பாரப்பட்டி கனகராஜன் இல்லத்தில் முக்கிய ரஜினி ரசிகர்கள் மட்டும் கலந்து கொண்ட ரகசிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற சேலத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் நம்மிடையே கூறுகையில், தமிழகம் மட்டும் அல்ல உலக சூப்பர் ஸ்டார் என்று தற்பொழுதும் அனைவராலும் உற்றக்கூடிய கடந்த 1996 ஆம் ஆண்டு அரசியல் கட்சிக்கு நான் வரப்போவதில்லை என்றும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் எனக்கு ஆதரவு இல்லை என்பதையும் அவர் திட்ட பட்டமாக கூறியிருந்த நிலையில், கடந்த 22 ஆம் ஆண்டு பாரப்பட்டி கனகராஜ் ஆகிய எனது தலைமையில் திருப்பதிக்கு ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடை  பயணமாகவே சென்று ரஜினிகாந்த் அவர்கள் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து மீண்டும் அரசியல் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டதாக குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், இதே போல கரண்ட் 2013 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவிலான யாகம் வளர்க்கப்பட்டு மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டதாக தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்றத்தில் தான் பொறுப்பில் இல்லை என்றாலும் கூட ரஜினிகாந்த் அவர்களுக்காக எண்ணற்ற நல உதவிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி வருவதாகவும், சேலத்தை சேர்ந்தவர் மண்ணின் மைந்தர் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்களின் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததாக குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், மன்றத்திலிருந்து விலகி இருந்தாலும் கூட முக்கிய நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதல் பெற்று மட்டுமே இந்த அறிவிப்பை தான் கூறியதாகவும், நிலைமை இப்படி இருக்கும்போது ரஜினி ரசிகர் மன்ற இணைச்செயலாளர் எஸ் கே கணேசன் என்பவர், பாரப்பட்டி கனகராஜன் இந்த முடிவுக்கு ரஜினி மன்றத்திற்கும் எந்த தொடர்பும் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சம்பந்தமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுகவிற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் முழு ஆதரவு என கூறி இருப்பதும் இதற்கும் மன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அவர் தேவையில்லாமல் குறிப்பிட்டார் என்று கடுமையாக எஸ் கே கணேசன் அவர்களை சாடிய அவர், சேலத்தின் மண்ணின் மைந்தரான எடப்பாடி யார் அவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் எஸ் கே கணேசன் அவர்களின் இந்த செயல் வன்மையாக த்தகதி என்றும் ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஜினிகாந்த் அனைத்து மன்றங்களையும் கலைத்து விட்டார் ஆனால் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கட்டுப்பாட்டில் தற்பொழுதும் வைத்துள்ள சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு திமுகவின் சதியில் சிக்கி திமுகவின் தூண்டுதலில் பெயரில் எஸ்.கே கணேசன் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார் என்று குற்றம் சுமத்திய பாரப்பட்டி கனகராஜ் 11 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி உறுதி என்றும் திமுகவின் சதி ஒருபோதும் எடுபடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தாலுமே கூட சேலம் மாவட்டத்திற்கு என பல திட்டங்களை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் என்றாலும் கூட சேலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செய்து தருவதாக கூறி மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் கே கணேசன் மீண்டும் இதே நிலையில் தனது செயல்பாட்டை தொடர்ந்தார் என்றால் எஸ் கே கணேசன் மீது மான நஷ்ட வழக்கு தொடங்குவேன் என்றும் மிக வன்மையான எச்சரிக்கையும் விடுத்துள்ள பாரப்பட்டி கனகராஜ், நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார். அப்போது நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: