வியாழன், 23 ஜூலை, 2026

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

நாமக்கல், 
S.க. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால்  டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். 
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,
தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு 
காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி, தமிழகத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவிப்பின் பேரில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு அதற்கு தீர்வும் காணப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக விவசாயிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தற்போது வரை முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியில் குவிந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீரை திறக்க போராட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோது, தமிழக கர்நாடக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்திலும் கூட கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதாலும் குடிநீருக்கு மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கை விரித்து இருந்தது. நிலைமை எப்படி இருக்க, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தற்போது வரை மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது கர்நாடக முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
இது சம்பந்தமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு, தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வேலுச்சாமி குறிப்பிட்டு உள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு .டி.கே.சிவக்குமார் அவர்கள், தமிழ் நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக பேசுவதற்கு அழைத்துள்ளார். அது தொடர்பாக  வருகின்ற 3 ந் தேதி அனறு தமிழக முதல்வர் அவர்கள் பெங்களூர் செல்லவுள்ள நிலையில்  இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி தண்ணீர் வரத்து இல்லாமல் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்பதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டக் கூடாது எனவும் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு அங்குள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்தவிதமான தார்மிக உரிமையும் கிடையாது, தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு டி.கே.சிவக்குமார் அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கு உண்டான சம்பா தாளடி பருவத்தில் பயிர் செய்வதற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்று தரும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு அமைய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தீர்க்கமாக அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: