வியாழன், 9 ஜூலை, 2026

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு. 

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சேர்ந்த மாநில தலைவர் சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாததை கண்டித்து, அங்குள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம் இணைந்து வருகின்ற 15.7.2026 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியில் இருந்து தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடக சென்று அங்குள்ள அணைகளில் காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க கோரி போராட்டம் நடத்த உள்ளோம். 
எனவே தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாசனம் பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி சுற்றறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: