சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.
இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி விடுதுள்ள அழைப்பு கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததை கண்டித்து அங்கு உள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற கழகம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புக்கள் இணைந்து நாளை மறுநாள் 15.7.2026 அன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு தமிழக எல்லையான ஓசூர் E S I மருத்துவமனை பகுதியில் இருந்து, தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்கு உள்ள அணைகளில் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்கப்படவுள்ளது. எனவே காவிரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் தமிழகத்தில் காவிரியை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள 22 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் பல தரப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.



0 coment rios: