சனி, 8 ஆகஸ்ட், 2026

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், கர்நாடகாவில் உள்ள தொழில் வளங்களைப் பாதிக்கும் வகையிலான தீவிர தொடர் போராட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல்,  கர்நாடகாவில் உள்ள தொழில் வளங்களைப் பாதிக்கும் வகையிலான தீவிர தொடர் போராட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை வெடிக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தொடர் போராட்டங்கள் அறிவித்து அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசிற்கு தலைவர் வேலுசாமி பகிரங்க  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
அந்த அறிக்கையில், கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை தர தொடர்ந்து மறுத்துள்ளது. காவிரி  உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு    உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறபித்தும் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய நடத்திய 54 கூட்டம் நடத்தப்பட்டதில் அதில் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என பலமுறை உத்தரவு பிறப்பித்தும் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் மதிக்காமலும் அதேபோல் தமிழ்நாட்டின் உரிமையை பரிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை  மேற்கொள்ளும் அடாவடி தனமாக கர்நாடகா அரசு  தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி ஒருபுறம் கர்நாடகா அணைகளில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி இந்தாண்டு முற்றிலும் பாசன வசதி இல்லாமல் பொய்த்து விட்டது.  தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் விளைவித்ததற்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் மற்றும்  கேரளா செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் மேலும்  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் போக்குவரத்தை முற்றிலும் முடக்குவோம். மேலும் தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு மற்றும் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பலகட்ட தொடர் போராட்டம் வாயிலாக கர்நாடகாவில்  உள்ள தொழில்வளம் பாதிக்கும் வகையில் முடக்கி காட்டுவோம் என்பதை கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுவதாக பகிரங்க எச்சரிக்கையினை வேலுசாமி அறிவித்துள்ளார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: