சேலம்,
S. K.சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி த லீடர்ஸ் சார்பில் சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழாவும் சுற்றுலா சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வீத லீடர்ஸ் கோவை தன்னார்வலர் பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் சுப்பிரமணியன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அரசூர் அசோகன், சிப்காட் எதிர்ப்பு போராட்ட குழு மகேஸ்வரி, சத்தியமங்கல காடுகள் ஆராய்ச்சி மாணவி செல்வி ஹரி ராஜஸ்ரீ, அனாதை பிணங்களின் பிதாமகன் மேட்டூர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு சேலம் எஸ் கே எஸ் மருத்துவமனை வழங்கிய இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழாவும், மாருதி ரத்த வங்கி வழங்கிய இலவச ரத்ததான முகாமும், அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கிய இலவச கண் பரிசோதனை முகாமும், வள்ளி மருத்துவமனை வழங்கிய எலும்பியல் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றல் நிகழ்வும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வீ த லீடர்ஸ்-ன் தலைமை சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தல் படி ஆகஸ்ட் மாதத்திற்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை தன்னார்வலர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தீர்மானங்களை முன்மொழிந்து அதை நிறைவேற்றினர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் பொதுமக்களும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்கள் பொது மக்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



0 coment rios: