சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றி பெருந்தலைவர் கல்வி சேவைக்கு உரிய மதிப்பளித்து இந்த திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு லட்சோப லட்ச காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து நன்றி போஸ்ட் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிசாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் 40 வது டிவிசன் தலைவர் P.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து, சேலம் மாநகரம் முழுவதும் போஸ்டர் விளம்பரங்கள் அடித்து ஒட்டி உள்ளார்.
அந்த சுவரொட்டிகளில்
பசி இல்லா காலை...
கல்வி நிறைந்த நாளை...
பெருந்தலைவர் காமராஜர் வழியில், எதிர்காலம் நம்முடையதாக இருக்கட்டும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.



0 coment rios: