சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், கைகளில் பால் கேன்களை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆவினுக்கு பால் வழங்கி வரும் உற்பத்தியாளர்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்க வேண்டும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பால் உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பது அவசியம் என்றும், இதன் மூலம் பால் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய ஆதரவு கிடைக்கும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர்கள் ஆர்.ராஜேந்திரன் மற்றும் எம். ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பங்கேற்றனர். அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, அவற்றுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



0 coment rios: