புதன், 9 செப்டம்பர், 2026

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை. 


இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை பதிவினை தமிழக அரசுக்கு வெளியேற்றுள்ளார், அந்த அறிக்கையின் அடிப்படையில், ஏற்கனவே,  ஏற்கனவே, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை காட்டிலும் விளையாட்டுத்துறை மட்டுமே மேம்பட்டது என்று பெருமைப்பட பேசியது மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகவே தமிழகம் உட்பட அனைத்து மாநில விவசாயிகள் தரப்பிலும் நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தவெக கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் சிறு ,குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்  பெரு விவசாயிகள் வாங்கிய பயிர் பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து முறையாக முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவில்லை.
இது  தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் உண்டாகியுள்ள கடுமையான வறட்சியின் பொருட்டு அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி, 
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழக விவசாயிகள் இரவு பகல் என்றும் பாராமல் கடுமையான உழைப்பின் மூலம் உடல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் தமிழக விவசாயிகளுக்கு தவெக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததையும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை காரணத்தை கருத்தில் கொண்டு தமிழக விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரி வைத்த கோரிக்கையை நிறைவேற்ற தவறிய தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதியிலும் தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி தவெக கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டால்  இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக  பிரச்சாரம் மேற்கொள்வோம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலை கொச்சைப்படுத்தி, தமிழக விவசாயிகளின் நலனில் எந்த அக்கறையும் செலுத்தாமல், தேர்தலில் அறிவித்த அறிக்கையை எதையும் செயல்படுத்தாமல், உட்பட எவ்வளவோ உள்ளது விவசாயிகளை பாதிக்கும் செயல். இவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து கேவலப்படுத்தி விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்டனம் தெரியாமல் வருத்தம் தெரிவிக்காமல் நாளை துபாய் சைடுல உள்ள தமிழக முதல்வர். 
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: