வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோட்டில் மருத்துவத் துறைக்கு புதிய மைல்கல்..!


இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ — ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக மேம்பட்ட மருத்துவப் படப்பிடிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘FUJIFILM Echelon Smart MRI’ கருவி ஈரோடு ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


FUJIFILM இந்தியா நிறுவனம் மற்றும் ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டர் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சியின் மூலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேம்பட்ட MRI பரிசோதனை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அதிநவீன MRI
இந்த புதிய MRI கருவியில் Deep Learning Reconstruction (DLR) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. 


இதன் மூலம் மருத்துவப் படங்களில் ஏற்படும் தேவையற்ற சத்தத்தை குறைத்து, தெளிவான மருத்துவப் படங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதால் நோயாளிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என்றும், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு பயன்பாடு
நரம்பியல், எலும்பு மற்றும் தசை, முதுகெலும்பு, வயிற்றுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த மேம்பட்ட MRI தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.


நோயாளிகளின் வசதியை கருத்தில் கொண்டு, MRI பரிசோதனையின்போது ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜான்சன்ஸ் ஹெல்த்தில் மருத்துவ வசதி மேலும் வலுவடைந்தது

ஜான்சன்ஸ் ஹெல்த்தில் ஏற்கனவே FUJIFILM Supria 32 CT கருவி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது Echelon Smart MRI நிறுவப்பட்டிருப்பது ஈரோடு பகுதியில் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும், FUJIFILM நிறுவனத்தின் Synapse 3D மேம்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் படப்பகுப்பாய்வு தளமும் மருத்துவப் பணிகளுக்கு துணையாக செயல்படுகிறது. 


இதன் மூலம் கதிரியக்கவியல், இதயவியல், அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் உள்ளிட்ட துறைகளில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் 3D மாதிரியாக்கம் மற்றும் படப்பகுப்பாய்வு வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

இந்த புதிய FUJIFILM Echelon Smart MRI துவக்க விழாவில் ஜான்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் நடராஜன், FUJIFILM நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் யோசிடா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் புதிய MRI கருவியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் அதன் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

“மருத்துவர்களுக்கு துரிதமான நோயறிதல்”

இதுகுறித்து சபா நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்த ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரின் நிர்வாக இயக்குனர் டி.என். திருக்குமார், 


புதிய MRI தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை நேரம் குறைவதுடன், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக அமையும் என தெரிவித்தார்.

மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் நோயறிதலில் மருத்துவர்களுக்கு கூடுதல் உதவி கிடைப்பதுடன், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அருகிலேயே நவீன மருத்துவப் பரிசோதனை வசதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஈரோட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘FUJIFILM Echelon Smart MRI’, ஈரோட்டின் மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்ப அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: