புதன், 31 ஜூலை, 2024

ஆகஸ்ட் 4ஆம் தேதி உலக எலும்பு மூட்டு தினத்தை ஒட்டி அனைத்து தரப்பினரிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி... சேலம் மிட் வேஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் தகவல்

ஆகஸ்ட் 4ஆம் தேதி உலக எலும்பு மூட்டு தினத்தை ஒட்டி அனைத்து தரப்பினரிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி... சேலம் மிட் வேஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் தகவல்

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஆகஸ்ட் 4ஆம் தேதி உலக எலும்பு மூட்டு தினத்தை ஒட்டி அனைத்து தரப்பினரிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி... சேலம் மிட் வேஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் தகவல்..

சேலம் ஐந்து ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் மிட் வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் மற்றும் செயலாளர் Dr. மயில்வாகனன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே சேலம் மிட் வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி சார்பாக பொதுமக்களின் அடிப்படை உயிர் காக்கும் BLS செயல்பாடுகளின் முக்கியத்துவம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் ஏற்பாடும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் BLS பாடத்திட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம். சேலம் மாநகர காவல் துறையினர், பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பல்வேறு இடங்களில் இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 
இது தொடர்பாக சேலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பது மேலும், அகஸ்டின் நான்காம் தேதி சேலம் ஐந்து ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் கட்டிடத்திலிருந்து விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடைபெற உள்ளதாகவும், அதேபோல தலைக்கவச விழிப்புணர்வு பேரணி ஐந்து ரோட்டில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா சென்றுவிட்டு மீண்டும் இந்திய மருத்துவ சங்க சேலம் கட்டிடத்தை வந்து அடைய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயார்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயார்: ஆட்சியர் தகவல்

மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (31ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 30 கிராமங்கள் காவிரி கரையோரத்தில் உள்ளன. இதில் 18 கிராமங்கள் உபரி நீரால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய துறைகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது காவேரி ஆற்றில் 1,25,500 கன அடி உபரிநீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக கூடும் என்பதால் கரையோர உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான கொடுமுடி, பவானி உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், லக்காபுரம் ஊராட்சி பரிசல் துறை, காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காங்கயம்பாளையத்தில் இப்பகுதி பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நஞ்சைகாளம்பாளையம் ஊராட்சி குலவிளக்கு அம்மன் கோயில், சத்திரப்பட்டி ஊராட்சி, கொளாநல்லி கிராமம் ஆகிய கரையோரப் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.