வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

தமிழக அரசு அருந்ததியர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளர் சந்திரன் வரவேற்பு..

தமிழக அரசு அருந்ததியர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளர் சந்திரன் வரவேற்பு..


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அருந்ததியருக்கான மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து, ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான சந்திரன் கூறுகையில், அருந்ததியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அருந்ததியர் மக்களின் போராளியாக அருந்ததியர் மக்களின் ஒப்பற்ற தலைவராக தலைவர் ஐயா அதியமான் அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் பல்வேறு அறவழி போராட்டங்களையும் நிகழ்வுகளையும் முன்னெடுத்து அருந்ததியர் மக்களின் விழிப்புணர்வுக்காக அங்கீகாரம் வரவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களுக்கு ஆன ஒரு இட ஒதுக்கீடும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு 2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலே ஐயா அதியமான்  அவர்கள் கோரிக்கையை வைத்தார். அதியமான் அவர்களின் கோரிக்கையை ஏற்று அருந்ததியர் மக்களுக்கான தனி சட்டம் தனி இட ஒதுக்கீடு உள்ள இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் தலைவர் ஐயா அதிகமானவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு சட்டம் நிறைவேற்றி அன்றைய நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை இன்றைய முதல்வர் தமிழகத்தின் தளபதி யார் அவர்கள் தலைமையிலே அது சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்தார். இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை சிலர் எதிர்த்து மேல்முறையீடு செய்து மாநில அரசுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க அங்கீகாரம் இல்லை என்று மேல்முறையீடு செய்து வழக்கானது கடந்த 10 ஆண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே ஏழு பேர் நீதிபதிகள் கொண்ட அமர்வானது அருந்ததியருக்கான மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் ஐயா அதிகமான் அவர்களின் தலைமையிலே இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஒட்டுமொத்த அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்களோடு சந்தித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இது சம்பந்தமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்று தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் அருந்ததியர் மக்களின் சார்பாகவும் எங்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியினையும் அருந்ததியர் சமுதாயம் உயர வேண்டும் அடுக்கப்பட்ட மூட்டையிலே அடிமுட்டையாக கிடைக்கின்ற இந்த அருந்ததியர் சமுதாயத்தின் வளர்ச்சியை முன்னேற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் ஐயா அதிகமானவர்களுக்கு நன்றியினை இந்த வேலையை தெரிவித்துக் கொண்டு இந்த தீர்ப்பினை பெற்று தந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அனைவருக்கும் இந்த தீர்ப்பு பெற்றுத் தந்தமைக்கு நன்றி கூறுகிறோம்.  ஒட்டுமொத்த அருந்ததியர் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி கூறுகிறோம். கோரிக்கைகள் தொடர்ந்து அருந்ததியர் மக்கள் வாழ்வாதார வளம் பெறவும் அருந்ததியர் மக்களுக்கான உள் ஒதுக்கீடு  வலுப்படுத்தவும் உயர்த்தி தரக்கூடிய தமிழக முதல்வர் சந்தித்து ஐயா அதியமான் தலைமையில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி

ஈரோடு சோலாரில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று 2ம் தேதி) காலை நடைபெற்றது. ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுத்த இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

பின்னர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாசுக்கு பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். அவருடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தார். மேலும், இவ்விழாவில் திமுக கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் பிரியாணிபாளையம் புதிய கிளை திறப்பு

ஈரோட்டில் பிரியாணிபாளையம் புதிய கிளை திறப்பு

lஈரோட்டின் பிரபல பிரியாணிபாளையம் கடையின் புதிய கிளையின் திறப்பு விழா குமலன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (1ம் தேதி) நடந்தது. இந்த விழாவில் , கடையின் நிர்வாக இயக்குனர் நயீம் கான் வரவேற்றார். யூஆர்சி கன்ஸ்ட்ரக்சன் இயக்குனர் சி.தேவராஜன் கலந்து கொண்டு கிளையை துவங்கி வைத்தார்.

செல்வா சேரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜே.ஜே.பாரதி முதல் விற்பனை துவங்கி வைத்தார். அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சின்னசாமி முதல் விற்பனை பெற்றுக் கொண்டார். சிட்டி ஹாஸ்பிடல் நிர்வாகி டாக்டர்.அபுல் ஹசன் முதல் தளத்தை துவங்கி வைத்தார்.

முக்கிய சமையலறையை எம்சிஆர் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சி.ராபின் துவங்கி வைத்தார். டைனிங் ஏரியாவை சுதா ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் கே சுதாகர் துவங்கி வைத்தார். மேலும், விழாவில், மாநகரின் முக்கிய தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் நயீம் கான் கூறுகையில், இங்கு அனைத்து அசைவ உணவுகளுக்கும் நோ பிளேட் சார்ஜ், ஒன்லி கிலோ சார்ஜ் முறையில் உணவுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்