சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி விஜய பானு என்பவரின் வளர்ச்சியை சீர்குலைக்க செந்தில்குமார் பல கோடி ரூபாய் அபகரித்து, நிகழ்த்திய சதி வலையே கைது நடவடிக்கைக்கு காரணம். விஜயபானுவின் அறக்கட்டளை வழக்கறிஞர்கள் பகிரங்க குற்றச்சாட்டு........
சேலத்தில் பண ரெட்டிப்பு மோசடி வழக்கில் தலைமையகமாக இருந்த தம்பதியினர் கைது.
சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை விஜய பானு என்பவர் நடத்தி வந்தார். இவர் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி அந்த பகுதியினர் இடையே கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விஜய பானு மற்றும் அறக்கட்டளை ஜெயப்பிரதா, பாஸ்கர், சையதுமுகமது ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து இட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் அவருடைய மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் அவருடைய மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோவையில் உள்ள டான் பிட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பண ரெட்டிப்பு மோசடி வழக்கு குறித்து உண்மை நிலையை கண்டறிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள விஜய பானு அவர்களின் அறக்கட்டளையின் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நமது செய்தி குழு அனுகியது. அப்பொழுது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் திடுக்கிட வைப்பதாகவே இருந்தது. அப்போது வழக்கறிஞர்கள் கூறுகையில், செந்தில்குமார் என்பவர் வலியுறுத்தியதன் அடிப்படையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிய இந்த அமைப்பு, பணம் இரட்டிப்பு செய்து தருவதற்காக தொடங்கப்பட்டதாகவும், இதனை அறிந்த அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் பணத்தை செலுத்தி இதில் பலனும் அடைந்ததாகவும், இந்த அறக்கட்டளையில் தன்னை இணைத்து கொண்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பணம் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, நேர்மையான முறையில் விஜய பானு பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் இரட்டிப்பு செய்து கொடுத்து வந்ததன் அடிப்படையில் விஜய பானுவின் மதிப்பு உயர்ந்ததாகவும் தெரிவித்தஅவர்கள், செந்தில்குமார் என்பவர் தனக்கு கீழ் சுமார் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட பாதிரியார்களை வைத்துக்கொண்டு பணம் முதலீடு செய்பவர்களிடம் ஒரு தொகையை கமிஷன் அடித்துக் கொண்டு பின்னர் விஜய பானு நடத்தி வரும் அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்ததாகவும், ஏராளமானவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முதலீடு செய்வதையும் தவிர்த்து உள்ளார். ஒருபுறம் விஜய பானுவின் புகழ் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், அம்மாபேட்டை பகுதியில் இமானுவேல் பேராலயம் அமைப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை விஜய பானுவிடம் செந்தில்குமார் கேட்டு பெற்றதாகவும், பேராலயம் அமைப்பதற்கான பணியையும் தொடங்கவில்லை. பேராலயம் அமைப்பதற்கான நன்கொடையை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்திலேயே செந்தில்குமார் முதலீடு செய்ததாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் இதனை அறிந்த விஜய பானு அவர்கள், சம்பந்தப்பட்ட செந்தில் குமாரிடம் கேட்டபோது சூழ்ச்சி செய்து வேண்டுமென்றே சிறப்பு பல நாடகங்கள் ஆடி காவல் துறையில் சிக்க வைத்ததாக கூறிய வழக்கறிஞர்கள், இதனை பொறுத்துக் கொள்ளாத செந்தில்குமார் கால் புணர்ச்சி காரணமாக இவரது பெயர் புகழ் அந்தஸ்து ஆகியவற்றை பழி தீர்க்கும் வகையில், சில காவல்துறை அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு தீட்டிய திட்டமே இந்த வழக்கின் உச்சக்கட்டம் என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய பானு மற்றும் அவரது நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, செந்தில்குமார் என்பவரும் அவரது மனைவியும் தலைமறைவாக இருந்தனர் என்றும் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய அப்போது புதிதாக பொறுப்பேற்று இருந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் என்பவர் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்ததாகவும், அது மட்டுமல்லாமல் இந்த வழக்கு தொடர்பாக செந்தில்குமாரின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கம் செய்யப்பட்டிருந்தவங்கி கணக்குகளை நீக்கம் செய்வதற்காக தனது வழக்கறிஞர் ஒருவருடன் செந்தில்குமார் காவல் நிலையத்திற்கு வந்தபோது, டி எஸ் பி சந்திரசேகர் உத்தரவின் பெயரில் அதிரடியாக செந்தில்குமார் கைது செய்யப்பட்டார் என்றும் கூறிய வழக்கறிஞர்கள், அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் பண இரட்டிப்பு செய்து தருவதாக ஏற்பட்ட மோசடியில் 217 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சுமார் 7 கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகையையும் விஜய பானு அவர்கள் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், இதுபோக புகார் அளிக்காத அவர்களுக்கும் அவர்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்குவதற்கும் விஜய பானு அவர்கள் தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விசாரணை மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இருப்பதாக பாராட்டிய அவர்கள், இந்த வழக்கு முடிந்த பிறகு இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்க விஜய பானு அவர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இந்த பண மோசடி வழக்கில் பல கோடி ரூபாயை அறக்கட்டளை நிர்வாகியான விஜய பானுவுக்கு தெரியாமல் அபகரித்தது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பிறகு கிராமப்புறத்தில் உள்ள படிக்காதவர்கள் கூட தாங்கள் முதலீடு செய்த பணம் தங்களுக்கு கிடைத்தால் போதும் என்பதை அவர்களது குறிப்பேட்டில் பதிவிட்டது ஒரு புறம் இருக்க, ஆனால் படித்தவர்கள் பண ஆசைக்காக 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும் அது தற்போது வரை தங்களுக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது என்பதும் அறக்கட்டளை வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விஜய் பானு மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பிறகு செந்தில்குமார் என்பவர் ஜீவன் அறக்கட்டளை என்ற பெயரில் ஏழையை இளையவர்களும் பணம் பெற்று வசூல் செய்ததும் தெரியவந்தது என்பது வழக்கறிஞர்களின் தகவலாகவே உள்ளது. மேலும் இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூலித்து பல கோடி ரூபாயை அபகரித்த செந்தில்குமார் இடம் இருந்து அந்த தொகையை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தப் வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இனிவரும் காலங்களில் கூடுதல் தகவல் வெளியாகும் என்றே எதிர்பார்க்கலாம்.
இறுதியாக செந்தில்குமரிடம் பணம் முதலீடு செய்தவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.