பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல் நிர்வாகிகளும், மண்டல ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரண்டு தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களிடம் மனு வழங்கினர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஈரோடு மண்டல சபையில் உள்ள இமாம்களிடம் ஜுபைர் அகமது, நிசார் முகமது மற்றும் ஆகிய இருவரும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் அறிமுமாகி பழைய இரும்பு வியாபாரம், ரியல் எஸ்டேட், நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய தொழில்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் அதில் நீங்களும் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் அலைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்.
அது மட்டுமின்றி மேற்படி இருவரும் எங்களுடைய ஆலிம் பெருமக்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் பல்வேறு வகையில் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்து வருகின்றார்கள் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்து கட்சியின் சார்பாகவும் மனு வழங்கினோம் என தெரிவித்துள்ளனர்.