திங்கள், 9 ஜூன், 2025

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!


பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல் நிர்வாகிகளும், மண்டல ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரண்டு தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களிடம் மனு வழங்கினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஈரோடு மண்டல  சபையில் உள்ள இமாம்களிடம் ஜுபைர் அகமது, நிசார் முகமது மற்றும்  ஆகிய இருவரும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் அறிமுமாகி பழைய இரும்பு வியாபாரம், ரியல் எஸ்டேட், நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய தொழில்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் அதில் நீங்களும் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் அலைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்.

அது மட்டுமின்றி  மேற்படி இருவரும் எங்களுடைய ஆலிம் பெருமக்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் பல்வேறு வகையில் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்து வருகின்றார்கள் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்து கட்சியின் சார்பாகவும் மனு வழங்கினோம் என தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 3 ஜூன், 2025

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்


இன்று 102 - வது பிறந்தநாள் விழா - ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை - நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்...

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல் - அமைச்சருமான மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் விழா இன்று தி.மு.க.வினரால் செம்மொழி நாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சந்திரகுமார் எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பி.கே. பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகரத் துணைத் தலைவர் சந்திரசேகரன், பகுதி செயலாளர் கோட்டை ராமச்சந்திரன், அக்னி சந்துரு, கவுன்சிலர்கள் கீதாஞ்சலி செந்தில்குமார், வக்கீல் ரமேஷ் குமார், நிர்வாகி கேபிள் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.