சனி, 25 நவம்பர், 2023

ஈரோட்டில் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு கிழக்கு கொங்காலம்மன் கோவில் வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன் ஆகியோர் அங்குள்ள ஒரு கடையில் சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் உரிமையாளர்களான தாராராம் (38), நவராம் பஞ்சா மகன் பிரகாஷ் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும். தற்போது ஈரோடு கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு ஒப்புதலுடன், ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமர்பித்த பரிந்துரையின்படி கடைக்கு சீல் வைக்க அனுமதி கோரி மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: