வியாழன், 30 நவம்பர், 2023

ஈரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு 'சீல்'

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் மற்றும் போலீசார் ஈரோடு திண்டல், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் பெருந்துறை சாலை பகுதியில் உள்ள 32 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கும் மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 5 கடைகளும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: