அதன்படி அவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாளை வருவதாக இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெருந்துறை வருகை தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது அவர், வருகிற 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.
அன்று காலையில் கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு திட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
0 coment rios: