திங்கள், 6 நவம்பர், 2023

இடைத்தேர்தலின்போது அவதூறு பேச்சு: ஈரோடு கோர்ட்டில் சீமான் ஆஜர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு சமூகத்தினர் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சீமான் மீது எஸ்.சி., எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஈரோடு கோர்ட்டில் சீமான் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், வழக்கு கடந்த 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாலதி விசாரணை நடத்தினார். அப்போது சீமான் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (நவ.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் வழக்கை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: