ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் பவானி அடுத்த ஜம்பை அருகே உள்ள பெரியமோளப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த ரேஷன் அரிசியை அரைத்து கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்ல முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பாலமேடு புதூரை சேர்ந்த அசோகன் (வயது 50), பவானி அருகே ஜம்பை பெரியமோளப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 40), அதேபகுதியை சேர்ந்த தாமோதரன் (வயது 34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 35 மூட்டைகளில் கடத்தப்பட்ட 1 டன் 750 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் அரவை இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: