வெள்ளி, 15 டிசம்பர், 2023

ஈரோட்டில் வருகிற 18ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி நடப்பாண்டிற்கான சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: