தமிழ்நாடு முதலமைச்சர் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதல் சென்றடையும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் "மக்களுடன் முதல்வர்" சிறப்புத் திட்ட முகாம் நடத்த உத்திரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 18ம் தேதி (திங்கட்கிழமை) ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1ல் உள்ள 1,2,3,4 வார்டுகளுக்கான முகாம் பவானி ரோடு பிளாட்டினம் மஹாலிலும், ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2ல் உள்ள 11,12,18 வார்டுகளுக்கு மாணிக்கம்பாளையத்தில் உள்ள மஞ்சள் அரிமா சங்க மண்டபத்திலும் நடைபெறுகிறது.
அதேபோல், பெருந்துறை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான முகாம் பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்திலும், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான முகாம் பெருந்துறை ஈரோடு ரோடு, கலை திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.
மேலும், சென்னிமலை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கான முகாம் செங்குந்தர் கைக்கோல முதலியார் அறக்கட்டளை மண்டபத்திலும், கதிரம்பட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுக ளுக்கான முகாம் மேட்டுக்கடையில் உள்ள கே.எஸ்.ஆர். மண்டபத்திலும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள் கணினியில் பதிவு செய்யப்படுவதால் கோரிக்கைகான அனைத்த ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: