ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 335 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திங்கள், 11 டிசம்பர், 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: