அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, தமிழக முதல்வர் இந்தியா கூட்டணியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றதோடு பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நிலையை கூறி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், நிதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவருக்கு சந்தோஷமான சில விஷயங்களை பேசி குறை கூறி வருகிறார்.
அமைச்சர் உதயநிதி, நிர்மலா சீதாராமன் இடையேயான சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பதில் அளித்த அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு சரியான முறையில் உரிய விளக்கங்களை அளித்து வருகிறார். இந்த விவகாரத்திற்கு மற்ற அமைச்சர்கள் வேறு மாதிரி சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், 1ஆம் மண்டல தலைவர் பி.கே பழனிச்சாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 coment rios: