ஈரோடு ஈ.வி.என் ரோடு பவர்ஹவுஸ் எதிரில் டாக்டர் சுமதி பத்மநாபன் நிஷாந்த் மருத்துவமனை 31 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவரது மருத்துவ சேவையை பாராட்டி மருத்துவதுறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி முனைவர் ஏ.கே. விஸ்வநாதன் டாக்டர் சுமதி பத்மநாபனுக்கு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
உடன் கவிதாலயம் ராமலிங்கம், சென்னை ஸ்ரீநிதி, ஸ்ரீராகவேந்திரா கண்மருத்துவமனை டாக்டர் எஸ்.எஸ். சுகுமார், காலேஜ் ஆப் பார்மஸி தலைவர் ஸ்பிக் தங்கமுத்து, எஸ்.வி.என் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் மல்லிபெரியசாமி, கொங்கு கலையரங்கம் தலைவர் டர்மரிக் சின்னசாமி, செயலாளர் ஆர். சுப்ரமணியம், பொருளாளர் ஹரிராம்சந்த்ரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: