பின்னர் அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரோடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செயல்பட்டு வந்த கால்நடை கிளை நிலையமானது, கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது, ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கும் வகையில் கால்நடை மருந்தகத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரகாஷ், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பழனிச்சாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், உதவி இயக்குநர் சேகர் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: