ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகம் மற்றும் மாவட்ட காவல் அலுவலம் ஆகியவற்றில் கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலர்களின் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்ட அவர், காவல் ஆளிநர்களின் கவாத்து பயிற்சி, உடை பொருட்கள், அலுவலக கோப்புகள், அங்கு பராமரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்தார். பின்னர், வாகனத்தை நல்ல முறையில் பராமரித்து வைத்திருந்த இரு காவல் வாகன ஓட்டுநர்களை பாராட்டி வெகுமதி வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வாகனங்கள் பராமரிப்பு, கைதி வழிக்காவல்கள், ஆயுதங்களை நல்ல முறையில் பராமரிப்பது மற்றும் காப்பு பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து பிரிவுகள் மற்றும் பண்டக பிரிவினை ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அமைச்சுப் பணியாளர்களால் பராமரிக்கப்படும் அனைத்துக் கோப்பு மற்றும் ஆவணங்களை பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு பணப் பயன்களை விரைவாக பெற்று தருமாறும், தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் தபால்களுக்கு உடனுக்குடன் பதிலறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடனிருந்தார்.
0 coment rios: