ஈரோடு மாவட்டம், சித்தோடு, நசியனூர் மற்றும் காஞ்சிக்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெள்ளிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்றும், நோயாளிகள் அமர இருக்கை வசதிகள், போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா? என்பது குறித்தும் அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்குமாறும், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, தொடர்புடைய மருத்துவர்கள் உடனிருந்தனர்
0 coment rios: