பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது லரீப், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீரான், துணைத்தலைவர் சுல்தான் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை பிரதிநிதிகள் கோவை அக்பர் அலி, முகமது ரிஸ்வான், ம.தி.மு.க. மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை ஈரோடு மண்டல செயலாளர் முகமது ஹபீல் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளான அமீர், சலிம், அத்தர் ரபிக், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, பாபு என்கிற முகமது அலி, இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர்கள் சாகுல் அமீது, முகமது ரபீக், தஸ்ருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 coment rios: