வியாழன், 4 ஜனவரி, 2024

ஈரோட்டில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக் காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம், நாடார்மேடு, சாஸ்திரிநகர், நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளிக்கூட பகுதி, ஜீவாநகர், சேரன் நகர், சோலார், சோலாரில் உள்ள தொழிற்பேட்டை, போக்குவரத்துநகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர், 19ரோடு பகுதி, பச்சப்பாளி, சஞ்சய் நகர் மற்றும் பாலுசாமிநகர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: