செவ்வாய், 23 ஜனவரி, 2024

ஈரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 15ம் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஈரோடு உதவி பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் கதிர்வேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், அவர் கூறுகையில், இந்த முகாம் நிகழ்ச்சியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது போன்ற வாசகங்கள் ஒலிப்பெருக்கி மூலமாக ஒலி பரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த முகாமில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நம்ம சாலை’ என்ற புதிய செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சாலையில் பள்ளம் இருந்தால் உடனுக்குடன் புகார் தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சாலை’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியில் புகார் பதிவுக்கான பகுதியை தேர்வு செய்து, செல்போன் கேமரா மூலமாக பள்ளத்தை புகைப்படம் எடுத்து பதிவிட வேண்டும். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் தொடர்பான தகவலுடன் எங்களுக்கு வந்துவிடும். நாங்கள் 24 மணி நேரத்துக்குள் பள்ளம் சரி செய்யப்படும் என்றார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: