வெள்ளி, 12 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலத்தில் பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஈரோடு மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் மாநகர நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு கவுன்சிலர்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: