திங்கள், 8 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: பவானி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: கோவையைச் சேர்ந்த 11 பேர் காயம்

கோவையில் இருந்து 13 பெண்கள், 5 ஆண்கள், 3 குழந்தைகள் என 18 பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து சென்றனர். கோவிலில் இருமுடி செலுத்தி விட்டு இன்று அதிகாலை வேனில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அடுத்த பச்சபாளிமேடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற பழைய இரும்பு பொருட்கள் ஏற் றுச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் வந்த 9 பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: