ஈரோடு மாவட்டம் சோலார் புதூர் பகுதியில் அட்சயம் அறக்கட்டளை சார்பில் செயல்படும் யாசகர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: