திங்கள், 19 பிப்ரவரி, 2024

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 337 மனுக்கள் ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 337 மனுக்கள் பெறப்பட்டன. 

கூட்டத்தில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த பவானி, சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு உடனடி நடிவடிக்கையாக மருத்துவ காப்பீட்டு அட்டையினை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ராஜகோபால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: