ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரபுரி செங்குந்தர் கைக்கோளர் முதலியார் திருமண மண்டபத்தில், கலைஞர் மக்கள் சேவை முகாம் நடைபெற்றது . முகாமிற்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். முகாமை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-
கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு முதியோர் உதவித்தொகை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு அட்டை, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை, உழவர் அடையாள அட்டை, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி, தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில், நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாமில் நிறைவு பெற்ற மீதமுள்ள பகுதிக்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. மக்களின் வளர்ச்சிக்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்லமுறையில் பெற்றுக் கொண்டு, பயன்பெற வேண்டும்/
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி, குமாரபுரியில், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு மற்றும் எக்கட்டாம்பாளையம் ஆகிய 3 கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டிலான 38 புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை துவக்கி வைத்து, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களிமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழுத் தலைவர் பத்மநாபன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்ரி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: