புதன், 28 பிப்ரவரி, 2024

ஈரோட்டில் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலன், மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் விழா புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 81 பயனாளிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:- 

ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.1.46 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் என 81 பயனாளிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: