மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஈகிள் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்பி செல்வகுமார் சின்னையன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
மேலும், தென்றல் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும், செங்கோடம்பள்ளம் அரிமா மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், கொங்கு அறிவாலயம் மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு காலை உணவும், முத்து கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியா நிவாஸ் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பேரவை மாநில துணைச்செயலாளர் வீரக்குமார், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஈரோடு மாநகர் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, முருகசேகர், பாலாஜி, ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், மயில், மாவட்ட விவசாய பிரிவுச் செயலாளர் தங்கவேல், முருகானந்தம், தகவல் தொழில் நுட்ப பிரிவு சத்திய மூர்த்தி மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
0 coment rios: